நாளை பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் 21ம் தேதி வரை பிளஸ்டூ தேர்வுகள் நடந்தன. இதை 5 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர்.
இந்த நிலையில் மதிப்பெண்களைப் பட்டியலிடும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து நாளை காலை முடிவுகள் வெளியிடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று இரவு அறிவித்தார்.
கடந்த ஆண்டு மே 22ம் தேதி முடிவுகள் வெளியானது. ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
தேர்வு முடிவுகளை சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்கள், இணையதளங்கள், எஸ்.எம்.எஸ். மூலம் அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications