For Quick Alerts
For Daily Alerts
Just In
தொலைத் தொடர்புத்துறை அமைச்சரானார் ராசா:ரகுபதியிடம் வனத்துறை
டெல்லி:மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையிலிருந்து தயாநிதி மாறனை விலக்கிய திமுக தலைவர் கருணாநிதி, அந்தத் துறையை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராசாவிற்கு வழங்க பரிந்துரைத்தார். இதையடுத்து இன்று தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக ராஜா நியமிக்கப்பட்டார்.
இதுவரை ராஜாவிடம் இருந்த வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை இனி பிரதமரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தத் துறையின் இணையமைச்சர் பதவி உள்துறை இணையமைச்சர் ரகுபதியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் பரிந்துரையை ஏற்று இதற்கான உத்தரவுகளை இன்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது.
44 வயதான ராசா, கருணாநிதி மற்றும் மறைந்த முரசொலி மாறனின் அன்புக்கு பாத்திரமானவர். வழக்கறிஞரான இவர் பெரம்பலூர் ரிசர்வ் தொகுதியில் இருந்து 3 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
வாஜ்பாய் அரசில் மத்திய நலத்துறை இணையமைச்சராக இருந்தார்.
சிறந்த எழுத்தாளருமான ராசா, கவிதைகளும் எழுதுவார். ஆனால், தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு என்ற ஹை-டெக் துறைகளை கவனிக்கும் அளவுக்கு ராசாவுக்கு திறமை உள்ளதா என்பதை அவரது செயல்பாடுகளை வைத்து தான் எடை போட முடியும்.
Comments
arcot veerasamy pm thatstamil raja national dayanidhi maran தயாநிதி மாறன் headlines ராசா india news online வனத்துறை அமைச்சர் பழனி மாணிக்கம்
Story first published: Tuesday, May 15, 2007, 5:30 [IST]