ஐஸ் நிறுவனத்தில் அம்மோனியா கசிவு: 2 பேர் சாவு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே பூட்டிக் கிடந்த ஐஸ் நிறுவனத்தில் கேஸ்கசிவு ஏற்பட்டதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கம் என்ற கிராமத்தில், ஆனந்தராஜ் என்பவர் ஐஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த ஒரு வருடமாக இந்த நிறுவனம் இயங்காமல் பூட்டிக் கிடந்தது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தை செங்கல்பட்டைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் விலைக்கு வாங்கினார். நிறுவனத்தை வாங்கிய தீனதயாளன், அதில் இருந்த பழைய இரும்புப் பொருட்கள், அம்மோனியா வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் ஆகியவற்றை சென்னையைச் சேர்ந்த அயூப் கான் என்பவருக்கு விற்றார்.
இதையடுத்து தனது ஆட்கள் 7 பேருடன் செங்கல்பட்டு வந்த அயூப்கான் பொருட்களை அங்கிருந்து எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அங்கிருந்த அம்மோனியா வாயு சிலிண்டர்களை ஊழியர்கள் எடுக்க முயன்றபோது திடீரென அதிலிருந்து வாயு கசிந்தது. இதையடுத்து அங்கிருந்த அயூப்கானும், இன்னும் இருவரும் வெளியே ஓடி வந்தனர். அப்போது திடீரென அந்த அறையின் கதவு தானாக மூடிக் கொண்டு விட்டது.
இதனால் 5 ஊழியர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஐந்து பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் கேசவன் இறந்து விட்டார். மற்ற நான்கு பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் நைனாமுகம்மது சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். ஏ.சலீம், எம். சலீம் ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஷேக் முகம்மது என்பவர் கீழே விழுந்ததில் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!












Click it and Unblock the Notifications