வெளுக்கும் வெயில்-உருகும் சாலைகள்வறுபடும் மக்கள் - இதுவரை 6 பேர் பலி
சென்னை:சென்னை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக வெயில் மிகக் கடுமையாக உள்ளது. வெயிலுக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.
வழக்கமாக கோடை காலத்தில் தமிழகத்தில் வேலூர், சேலம், அரக்கோணம் போன்ற நகரங்களில்தான் மிகக் கடுமையான வெயில் இருக்கும். ஆனால் இந்த முறை கொடும் வெயில் தலைநகருக்கு இடம் மாறியுள்ளது.
சென்னை நகரில் கடந்த சில நாட்களாகவே வெயில் மிகக் கடுமையாக உள்ளது. தினசரி சரசாரி வெயில் அளவு 110 டிகிரியைத் தொட்டு வருகிறது. நேற்று 111 டிகிரி வெயில் அடித்தது. இன்றும் தனது விளையாட்டை விடவில்லை வெயில்.
இன்று காலை 6 மணிக்கே வெயில் வெளுத்து வாங்கத் தொடங்கி விட்டது. கடும் வெயில் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல இடங்ளில் தார்ச் சாலைகள் இளகி ரப்பர் மெத்தை போல மாறி விட்டன.
சாலையில் நடக்க முடியாமலும், இரு சக்கர வாகனங்களில் போக முடியாமலும் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையே கடும் வெயிலுக்கு இதுவரை 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சென்னை தாம்பரத்தில் 80 வயது முதியவரும், அம்பத்தூர் பட்டரைவாக்கம் பகுதியில் 60வயது முதியவரும் இறந்தனர்.
செங்கல்பட்டு பஸ் நிலையப் பகுதியில், 50 வயது முதியவர் வெயிலுக்கு சுருண்டு விழுந்து இறந்தார். இதேபோல அரக்கோணத்தில் பாலக்காட்டைச் சேர்ந்த 84 வயது முதியவர் அச்சுதானந்தன் என்பவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
இரட்டைக்கண் வாரவதா என்ற இடத்தில் 70 வயது முதியவர் பரிதாபமாக இறந்தார்.
சென்னையைத் தவிர வேலூர், திருச்சி, அரக்கோணம் ஆகிய ஊர்களிலும் வெயில் வெளுத்துக் கட்டி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் மிகக் கடுமையாக இருப்பதால் மக்கள் படும் அவதி சொல்லி மாள முடியாது.
இரவிலும் வெப்பம் அப்படியே வீட்டுக்குள் இருப்பதால் தூங்கவும் முடியாமல் மக்கள் பெரும் எரிச்சலுக்குள்ளாகின்றனர்.
-
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications