கேரள அமைச்சரின் செயலாளர் வீட்டில் சென்னை சிபிஐ அதிகாரிகள் சோதனை
திருவனந்தபுரம்:கேரள தொழில்துறை அமைச்சர் கரீமின் தனிச் செயலாளரின் வீட்டில் சென்னை சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரம் சோதனை நடத்தினர்.
கேரள மாநிலத்தில் கடந்த 1996ம் ஆண்டு ஈ.கே நாயனார் ஆட்சியின் போது பள்ளிவாசல், செங்குளம், ஆழியாறு ஆகிய பகுதிகளில் புதிய நீர்பாசன திட்டங்கல் தொடங்குவதற்காக கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்என்சி லாவ்லின் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
இதில் ரூ. 374.5 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான விசாரணையை தற்போது சிபிஐ போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் கேரள தொழில்துறை அமைச்சர் கரீமின் தனிச் செயலாளர் சசிதரன் நாயர் ஆகியோரின் திருவனந்தபுரம் வீட்டில் நேற்று அதிகாலை 4.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை சிபிஐ போலீஸார் சோதனை நடத்தினர்.
இதில் சில முக்கிய ஆவணங்கல் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சசிதரன் நாயர் ஈ.கே நாயனார் ஆட்சியில் மின்வாரிய ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications