இலங்கை ராணுவ தாக்குதலில் தமிழ் மாணவன் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கை ராணுவம் தமிழர் பகுதியில் நடத்திய தாக்குதலில் பள்ளி மாணவன் பலியானார். மேலும் ஏராளமான தமிழர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாயின.
கிளிநொச்சி பூநகரி பகுதியில் இலங்கையில் ராணுவம் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி தமிழர் பகுதிகளில் ராக்கெட் குண்டுகளை வீசி வருகிறது. இதனால் ஏராளமான தமிழர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
![]() |
இத் தாக்குதலில் கவாக்குளத்தை சேர்ந்த 10 வகுப்பு படிக்கும் மாணவனான மோகன்ராஜ் (15) உடல் சிதறி பலியானார். அவரது பெற்றோர் படுகாயமடைந்தனர்.
![]() |
ராணுவ விமானத்தை தாக்கிய கடற்படை!!!:
இதற்கிடையே, ராணுவம் அனுப்பிய ஆள் இல்லாத போர் விமானத்தை இலங்கை விமானப் படை சரமாரியாக தாக்கியது. கடற்படையினரும் சேர்ந்து கொண்டு அந்த விமானத்தை சுட்டனர்.
ஆனால் அந்த விமானம் தாக்குதலில் சேதமடையாமல் தப்பியது. புலிகளின் விமானம் என கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை சந்தித்ததால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.














Click it and Unblock the Notifications