உண்ணாவிரதம்- 2 இலங்கை அகதிகள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2 அகதிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டனர்.
செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கையில் பல்வேறு போராளிகள் அமைப்பில் இருந்தவர்கள், குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள், சந்தேகத்திற்கிடமானவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு 41 அகதிகள் தங்கியுள்ளனர். இவர்களில் 15 பேர் தங்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். நேற்று தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போது நிக்ஸன் (27), நிமலன் (26) ஆகியோரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர்.












Click it and Unblock the Notifications