கர்நாடகம்: லாரி-பஸ் மோதலில் 19 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களரூ:கர்நாடகத்தில் லாரியும் பஸ்சும் மோதி கொண்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெல்லாரி மாவட்டம் அலூர் கிராஸ் அருகே ஒரு லாரியில் திருமணம் முடிந்து மணமக்கள் தனது உறவினர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கர்நாடக அரசு பேருந்து ஒன்று லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் மணப்பெண் உள்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் உயிரிழந்தவர்களில் 6 குழந்தைகள் ஆவார்கள்.
படுகாயம் அடைந்த அனைவரும் சித்ரதுர்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications