தமிழக அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்தது செல்லும்: உச்சநீதிமன்றம்
டெல்லி:தமிழகத்தில் நுழைவுத் தேர்வை தடை செய்து சட்டம் கொண்டு வந்தது செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற் கல்விக்கான மாணவர் சேர்க்கையை பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்துவது, நுழைவுத் தேர்வை ரத்து செய்வது என தமிழக அரசு முடிவு செய்து சட்டம் கொண்டு வந்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிரபு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் தலைமை அரசு வழக்கறிஞர் விடுதலை உள்ளிட்டோர் ஆஜராகினர்.
இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அகர்வால், நவ்லேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்குத் தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முன்பு வழங்கிய தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்து மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தது.












Click it and Unblock the Notifications