13 வருடத்துக்கு பிறகு கோவை வரும் சாய்பாபா
Subscribe to Oneindia Tamil
கோவை:13 வருடங்களுக்கு பிறகு புட்டபர்த்தி சாய்பாபா இன்று கோவை வருகிறார்.
ஆண்டுதோறும் கோடைகாலத்தில் கொடைக்கானலில் 2 வாரங்கள் தங்கி தமிழக பக்தர்களுக்கு தரிசனம் தரும் சாய்பாபா கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி மதுரை வழியாக கொடைக்கானல் வந்தார்.
![]() |
புட்டபர்த்தியில் சாய்பாபாவை அருகில் சென்று பார்க்க முடியாது. ஆனால் இங்கு மிக அருகில் சென்று ஆசி பெறும் வாய்ப்பு கிடைத்ததால் வெளிநாட்டு பக்தர்கள் உள்பட ஏராளமானோர் கொடைக்கானல் வந்திருந்தனர்.
இந் நிலையில் இன்று புட்டபர்த்திக்கு செல்லும் வழியில் கோவை வருகிறார் சாய்பாபா. 13 வருடங்களுக்குப் பிறகு அவர் வருவதால் கோவையில் உள்ள அவரது பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஆவாரம்பாளையத்திலுள்ள ராமகிருஷ்ண திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் சாய்பாபா பிற்பகலில் விமானம் மூலம் புட்டபர்த்தி புறப்பட்டு செல்கிறார்.













Click it and Unblock the Notifications