டாக்டர்களின் அலட்சியம்-சிறுமி பரிதாப சாவு
சென்னை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகள் ரூபிகா (8). ரூபிகாவுக்கு நேற்று திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவளை திருவல்லிக்கேணியில் உள்ள அரசினர் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிறுமி ரூபிகாவுக்கு சுமார் 4 மணி நேரம் சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்னர் ரமணா படத்தில் வருவது போல, தீவிரமாக முயன்றோம், சிகிச்சை பலனளிக்கவில்லை, இறந்து விட்டார் என்று கூறி ரூபிகாவின் உடலை எடுத்துச் செல்லும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து ரூபிகாவின் உடலை உதயக்குமாரும் மற்றவர்களும் வீட்டுக்குக் கொண்டு வந்தனர். ஆனால் வீட்டுக்கு வந்த பிறகுதான் ரூபிகா மூச்சு விடுவதும், அவர் உயிருடன் இருப்பதும் தெரிய வந்து அதிர்ந்தனர்.
அலறி அடித்தபடி குழந்தையை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். சரியான சிகிச்சை அளித்திருந்தால் குழந்தையைக் காப்பாற்றியிருக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.
கஸ்தூரிபாய் மருத்துவமனையில் தங்களது குழந்தைக்கு சரியான சிகிச்சை தராமலும், குழந்தை இறந்து விட்டதாக பொய் கூறி அனுப்பி வைத்ததாலும் ஆத்திரமடைந்த உதய்குமாரும் உறவினர்களும் அங்கு சென்று குழந்தையின் பிணத்துடன் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!












Click it and Unblock the Notifications