மதுக் கடைகளை ஒழிக்க வேண்டும்:கருணாநிதியிடம் ராமதாஸ் கோரிக்கை
சென்னை:தமிழகத்தில் மதுக் கடைகளை படிப்படியாக ஒழிக்க வேண்டும். முதலில் மது பார்களை மூட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை திடீரென சந்தித்தார் டாக்டர் ராமதாஸ். நேற்று முன்தினம்தான் சென்னையில் நடந்த மது ஒழிப்பு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, மதுக் கடைகளை மூட முதல்வர் உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் மதுக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டத்தில் பாமக இறங்கும் என்று எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முதல்வரை அவர் திடீரென சந்திக்க வந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கோபாலபுரம் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மரியாதை நிமித்தமாகத்தான் முதல்வரை சந்தித்தேன். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என முக்கியமாக முதல்வரிடம் வலியுறுத்தினேன்.
மது விலக்கை படிப்படியாக கொண்டு வர வேண்டும். அதற்கு முதலில் கடைகளை ஒட்டி வைக்கப்பட்டுள்ள பார்களை மூட வேண்டும். கடைகளை பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் திறந்து வைக்கலாம் என யோசனை சொன்னேன்.
மதுவை ஒழிக்க முடியுமா, அது சாத்தியமா என்று முதல்வர் கேட்டார். படிப்படியாக மதுவை ஒழிக்க முடியும் என்றேன். யோசிக்கலாம் என்று முதல்வர் சொன்னார்.
பிறகு நதி நீர் இணைப்பு குறித்து பேசினோம். டெல்லியில் பிரதமரை முதல்வர் சந்தித்து இதுகுறித்து பேசவுள்ளார். அந்தத் திட்டத்தை மத்திய பட்டியலில் சேர்ப்பது குறித்தும் வலியுறுத்தினேன்.
அதன் பின்னர் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகிய பிரச்சினைகள் தொடர்பாகு நான்கு மாநில முதல்வர்களும் சேர்ந்து, பிரதமர் முன்னிலையில் பேச்சு நடத்த வேண்டும். தனித் தனியாக பேசினால் இழுத்துக் கொண்டேதான் செல்லும், நேரமும் வீணாகிறது.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் இந்திய விமான நிலைய ஆணையம் மூலமே செய்ய வேண்டும். ஓரகடம் அல்லது ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையத்தை அமைக்கலாம்.
ரிலையன்ஸ் கடைகளுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. ஈரோட்டில் வியாபாரிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தப் பிரச்சினை தொடர்பாக இதுவரை முதல்வர் கருணாநிதி தனது நிலையை தெளிவாக சொல்லவில்லை. அதுகுறித்தும் அவரிடம் கேட்டேன் என்றார் ராமதாஸ்.
அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணியும் உடன் இருந்தார்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications