மதுக் கடைகளை ஒழிக்க வேண்டும்:கருணாநிதியிடம் ராமதாஸ் கோரிக்கை
சென்னை:தமிழகத்தில் மதுக் கடைகளை படிப்படியாக ஒழிக்க வேண்டும். முதலில் மது பார்களை மூட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை திடீரென சந்தித்தார் டாக்டர் ராமதாஸ். நேற்று முன்தினம்தான் சென்னையில் நடந்த மது ஒழிப்பு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, மதுக் கடைகளை மூட முதல்வர் உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் மதுக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டத்தில் பாமக இறங்கும் என்று எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முதல்வரை அவர் திடீரென சந்திக்க வந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கோபாலபுரம் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மரியாதை நிமித்தமாகத்தான் முதல்வரை சந்தித்தேன். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என முக்கியமாக முதல்வரிடம் வலியுறுத்தினேன்.
மது விலக்கை படிப்படியாக கொண்டு வர வேண்டும். அதற்கு முதலில் கடைகளை ஒட்டி வைக்கப்பட்டுள்ள பார்களை மூட வேண்டும். கடைகளை பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் திறந்து வைக்கலாம் என யோசனை சொன்னேன்.
மதுவை ஒழிக்க முடியுமா, அது சாத்தியமா என்று முதல்வர் கேட்டார். படிப்படியாக மதுவை ஒழிக்க முடியும் என்றேன். யோசிக்கலாம் என்று முதல்வர் சொன்னார்.
பிறகு நதி நீர் இணைப்பு குறித்து பேசினோம். டெல்லியில் பிரதமரை முதல்வர் சந்தித்து இதுகுறித்து பேசவுள்ளார். அந்தத் திட்டத்தை மத்திய பட்டியலில் சேர்ப்பது குறித்தும் வலியுறுத்தினேன்.
அதன் பின்னர் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகிய பிரச்சினைகள் தொடர்பாகு நான்கு மாநில முதல்வர்களும் சேர்ந்து, பிரதமர் முன்னிலையில் பேச்சு நடத்த வேண்டும். தனித் தனியாக பேசினால் இழுத்துக் கொண்டேதான் செல்லும், நேரமும் வீணாகிறது.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் இந்திய விமான நிலைய ஆணையம் மூலமே செய்ய வேண்டும். ஓரகடம் அல்லது ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையத்தை அமைக்கலாம்.
ரிலையன்ஸ் கடைகளுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. ஈரோட்டில் வியாபாரிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தப் பிரச்சினை தொடர்பாக இதுவரை முதல்வர் கருணாநிதி தனது நிலையை தெளிவாக சொல்லவில்லை. அதுகுறித்தும் அவரிடம் கேட்டேன் என்றார் ராமதாஸ்.
அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணியும் உடன் இருந்தார்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications