For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபாகரனை கொண்டு வராதது ஏன்? சுவாமி கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சி எடுக்காதது ஏன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

பிரபாகரன் உத்தரவின் பேரிலேயே ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. பிரபாகரனை முதல் குற்றவாளியாகவும் விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரபாகரனுக்கு எதிராக சர்வதேச போலீஸும் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தனைக்குப் பிறகும் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர முயற்சி எடுக்காமல் உள்ளது தேசத்திற்கே அவமானமாகும்.

மாறாக, பிரபாகரனுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. பிரபாகரனை கொண்டு வர முயற்சிக்காமல், பல ஆண்டுகளாக மெளனம் சாதிப்பது ஏன் என்பதற்கு சோனியா காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரபாகரன்.

இன்று ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பது நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X