தயாநிதிக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரி பதவிபறிப்பு-காத்திருப்போர் பட்டியலில் வெயிட்டிங்
சென்னை:தயாநிதி மாறனுக்கு நெருக்கமானவராக அறியப்படும் சென்னை நகர போலீஸ் இணை கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோர் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரியான ரத்தோர் இப்போது லண்டனில் சுற்றுப் பயணத்தில் உள்ளார். சென்னை மத்திய பிரிவின் இணை கமிஷ்னராக இருந்த ரத்தோர் தூக்கப்பட்டு அந்த இடத்தில் பாலசுப்பிரமணியத்தை நேற்று இரவு தமிழக அரசு நியமித்துள்ளது.
ரத்தோருக்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. அவரை காத்திருக்கும் பட்டியலில் போட்டு வைத்துள்ளனர்.
அதே நேரத்தில் பாலசுப்பிரமணியம் சென்னை போலீஸ் தலைமையகத்தில் இணை கமிஷ்னராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தோர் செய்த பாவம் என்ன
![]() |
சமீபத்தில் சன் டிவி- திமுக மோதல் ஏற்பட்ட பின்னர் முதல்வர் கருணாநிதியின் அரசியல் பொன் விழா நிகழ்ச்சி நடந்தது. அதை நேரடி ஒளிபரப்பு செய்ய சன் டிவியின் அவுட்டோர் பிராட்காஸ்டிங் வேன் (ஓ.பி. வேன்) வந்தது. அந்த வாகத்தை உள்ளே விட வேண்டாம் என திமுக தலைமையிடம் இருந்து போலீசாருக்கு உத்தரவு வந்திருந்தது.
இதையடுத்து சன் டிவி வாகனத்தை போலீசார் தடுத்தனர். ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரத்தோர் சன் டிவி வாகனத்தை உள்ளே அனுமதிக்க முயன்றார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் போனது. அவர்கள் விரைந்து வாகனத்தை தடுத்து திருப்பி அனுப்பினர்.
ரத்தோரின் இந்த சன் டிவி அனுதாபம் தான் அவரது பதவியைப் பறித்துள்ளது.
இது ஆரம்பம் தான் என்று கூறப்படுகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் மாறன் குடும்பத்தினருக்கு ேவண்டிய தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் அனைவரும் தூக்கி அடிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல்













Click it and Unblock the Notifications