தயாநிதிக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரி பதவிபறிப்பு-காத்திருப்போர் பட்டியலில் வெயிட்டிங்
சென்னை:தயாநிதி மாறனுக்கு நெருக்கமானவராக அறியப்படும் சென்னை நகர போலீஸ் இணை கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோர் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரியான ரத்தோர் இப்போது லண்டனில் சுற்றுப் பயணத்தில் உள்ளார். சென்னை மத்திய பிரிவின் இணை கமிஷ்னராக இருந்த ரத்தோர் தூக்கப்பட்டு அந்த இடத்தில் பாலசுப்பிரமணியத்தை நேற்று இரவு தமிழக அரசு நியமித்துள்ளது.
ரத்தோருக்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. அவரை காத்திருக்கும் பட்டியலில் போட்டு வைத்துள்ளனர்.
அதே நேரத்தில் பாலசுப்பிரமணியம் சென்னை போலீஸ் தலைமையகத்தில் இணை கமிஷ்னராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தோர் செய்த பாவம் என்ன
![]() |
சமீபத்தில் சன் டிவி- திமுக மோதல் ஏற்பட்ட பின்னர் முதல்வர் கருணாநிதியின் அரசியல் பொன் விழா நிகழ்ச்சி நடந்தது. அதை நேரடி ஒளிபரப்பு செய்ய சன் டிவியின் அவுட்டோர் பிராட்காஸ்டிங் வேன் (ஓ.பி. வேன்) வந்தது. அந்த வாகத்தை உள்ளே விட வேண்டாம் என திமுக தலைமையிடம் இருந்து போலீசாருக்கு உத்தரவு வந்திருந்தது.
இதையடுத்து சன் டிவி வாகனத்தை போலீசார் தடுத்தனர். ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரத்தோர் சன் டிவி வாகனத்தை உள்ளே அனுமதிக்க முயன்றார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் போனது. அவர்கள் விரைந்து வாகனத்தை தடுத்து திருப்பி அனுப்பினர்.
ரத்தோரின் இந்த சன் டிவி அனுதாபம் தான் அவரது பதவியைப் பறித்துள்ளது.
இது ஆரம்பம் தான் என்று கூறப்படுகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் மாறன் குடும்பத்தினருக்கு ேவண்டிய தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் அனைவரும் தூக்கி அடிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.













Click it and Unblock the Notifications