செல்வராஜ்தான் தேர்தல் அதிகாரி: தேர்தல்ஆணையம்- ஜெ, வைகோ முகத்தில் கரி!
சென்னை:தமிழக ராஜ்யசபா தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக சட்டமன்றச் செயலாளர் செல்வராஜ் செயல்படுவார் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்திலிருந்து காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி இடங்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக செல்வராஜ் செயல்படக் கூடாது.
அவரை வைத்து திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடவும், அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பறிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
மதிமுகவும் செல்வராஜ் தேர்தல் அதிகாரியாக செயல்பட எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், செல்வராஜையே தேர்தல் அதிகாரியாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஜூன் மாதம் 15ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தல் குறித்து மத்திய தேர்தல் ஆணையம், இந்தத் தேர்தலை நடத்துவதற்கான விதிமுறைகள் பற்றிய குறிப்புகளை தமிழகத்தில் இதற்கான தேர்தல் அதிகாரியும், தமிழக சட்டப் பேரவை செயலாளருமான செல்வராஜுக்கு அனுப்பியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.