ராஜ்யசபா தேர்தலில் டி.ராஜா போட்டி
சென்னை:தமிழகத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்திலிருந்து 6 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் நான்கு பேரும், அதிமுக கூட்டணி சார்பில் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
திமுக கூட்டணியில் திமுக 2 இடங்களில் போட்டியிடும். காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்படும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடத்தில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா போட்டியிடுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜ்யசபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக டி.ராஜாவின் பெயரை தேசிய நிர்வாகக் குழுவுக்குப் பரிந்துரை செய்வது என கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.