குறுவை சாகுபடிக்கு வழி பிறக்குமா?தண்ணீருக்காக காத்திருக்கும் விவசாயிகள்!
தஞ்சாவூர்: ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா, குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியுமா என்ற கவலையில் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் காத்துள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப்படும் தஞ்சையில் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஆனால், மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் போதுமானதாக இல்லை. வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.
ஆனால் கர்நாடக அரசு முறைப்படி தண்ணீர் வழங்காததால், கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட நாளில் மேட்டூர் அணையைத் திறக்க முடியவில்லை.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 74.64 அடியாக இருந்தது. அணையின் மொத்த நீர் மட்ட அளவு 120 அடியாகும். அணைக்கு விநாடிக்கு 795 கன அடி நீரே வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 1500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளது.
அணையில் 50 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால்தான் அணை திறக்கப்படும். தற்போது 50 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தாலும் கூட, அணைக்கு போதிய அளவில் நீர் வரத்து இல்லை என்பதால் ஜூன் 12ம் தேதிக்குள் அணையின் நீர் மட்டம் 50 அடிக்கும் கீழே போய் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டுமானால் கர்நாடகத்தில் தென் மேற்கு பருவ மழை விரைவில் தொடங்கி வேகம் பிடித்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே தென் மேற்கு பருவ மழை பெய்வதைப் பொறுத்துத்தான் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து இருக்கும். அதைப் பொறுத்தே அணை திறக்கப்படுவதை எதிர்பார்க்க முடியும் என்பதால் மழைக் கடவுள் வந்து நம் மனதை மகிழ வைக்க வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள்.
கடந்த சில நாட்களாக காவிரிப் பாசனப் பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள வவசாயிகள், குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர். ஆழ்துளைக் கிணறு வசதி கொண்டவர்கள் குறுவை சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். மற்றவர்கள் மழைக்காக காத்துள்ளனர்.
காவிரிப் பாசனப் பகுதியில் மொத்தம் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இவை மழையை மட்டுமே நம்பியுள்ள பகுதிகள். மேலும் 10 ஆயிரம் ஏக்கர் பாசன நிலமும் குறுவை சாகுபடியின் கீழ் வருகிறது.
-
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications