புதிய சென்னை விமான நிலையம்:முடிவெடுக்க பிரதமர் தலைமையில் குழு
டெல்லி:சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவெடுக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் இட நெருக்கடி நிலவுவதால் அதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக பம்மல், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இத்திட்டம் குறித்து சமீபத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் தற்போதைய விமான நிலையத்தை ரூ. 2000 கோடியில் விரிவுபடுத்துவது எனவும், ஸ்ரீபெரும்புதூர் அருகே புதிய விமான நிலையத்தை அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தற்போதைய விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக பம்மல், பொழிச்சல் பகுதிகளில் நிலம் எடுக்காமல் மணப்பாக்கம், கொளப்பாக்கம், தரப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த இரு முடிவுகள் குறித்தும் பரிசீலித்து இறுதி முடிவெடுக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கூடி இறுதி முடிவை எடுக்கும்.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications