புதிய சென்னை விமான நிலையம்:முடிவெடுக்க பிரதமர் தலைமையில் குழு
டெல்லி:சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவெடுக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் இட நெருக்கடி நிலவுவதால் அதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக பம்மல், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இத்திட்டம் குறித்து சமீபத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் தற்போதைய விமான நிலையத்தை ரூ. 2000 கோடியில் விரிவுபடுத்துவது எனவும், ஸ்ரீபெரும்புதூர் அருகே புதிய விமான நிலையத்தை அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தற்போதைய விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக பம்மல், பொழிச்சல் பகுதிகளில் நிலம் எடுக்காமல் மணப்பாக்கம், கொளப்பாக்கம், தரப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த இரு முடிவுகள் குறித்தும் பரிசீலித்து இறுதி முடிவெடுக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கூடி இறுதி முடிவை எடுக்கும்.












Click it and Unblock the Notifications