பாஜக தமிழக பொறுப்பாளராக ரவிசங்கர் நியமனம்
டெல்லி: பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத்தின் பொறுப்பாளராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், மாநில பொறுப்பாளர்களை மாற்றியுள்ளார்.
![]() |
தமிழக பாஜக பொறுப்பாளராக முன்னாள் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரிக்கு தனஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் உத்தரப் பிரதேச பொறுப்பாளராக அருண் ஜெட்லியும், மத்திய பிரதேசத்திற்கு ஆனந்தகுமாரும், கோபிநாத் முண்டே ராஜஸ்தானுக்கும், கர்நாடகாவுக்கு யஷ்வந்த் சிங்கும், கேரளாவிற்கு பல்பீர் சிங்கும் பொறுப்பாளர்களாக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் மகளிர் பிரிவு தலைவராக மறைந்த பிரமோத் மகாஜனின் மனைவி சுமித்ராவும் சிறுபான்மையினர் பிரிவின் தலைவராக நஜ்மா ஹெப்துல்லாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் தேர்தல் நடவடிக்கை மற்றும் ஒருங்கிணைப்பாளராக முக்தார் அப்பாஸ் நக்வி தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications