ஜெ-சசி: கோடநாடு எஸ்டேட்டை ஆய்வு செய்யஅதிகாரிகளை தடுத்த அதிமுகவினர்
கோத்தகரி:சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு செந்தமான நீலகிரி கொடநாடு எஸ்டேட்டை போலீஸ் படையுடன் ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஜெயா டிவியின் நிர்வாகிகளில் ஒருவராக உள்ள இளவரசிக்கு சொந்தமான இந்த எஸ்டேட்டில் அரசு அனுமதியின்றி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இது குறித்து கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் கே.எம்.ராஜு தமிழக அரசிடம் புகார் கொடுத்தார்.
![]() |
இதுகுறித்து ஆய்வு செய்ய கடந்த 21ம் தேதி அரசு அதிகாரிகள் எஸ்டேட்டிற்கு சென்றனர் ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந் நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் சமயமூர்த்தி தலைமையில், கோவை நகர ஊரக வளர்ச்சி அதிகாரிகள், கோடநாடு ஊராட்சித் தலைவர் மற்றும் கோத்தகிரி தாசில்தார் ஆகியோர் போலீஸ் படையுடன் அங்கு ஆய்வு செய்ய செய்ய சென்றனர். அப்போதும் எஸ்டேட் நிர்வாகத்தினர் அவர்களுக்கு அனுமிதி மறுத்தனர்.
அப்போது நிர்வாகத்துக்கு ஆதரவாக முன்னாள் அரசு வழக்கறிஞர் அனந்த கிருஷ்ணன், அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் தேவராஜ், கோத்தகிரி பார் அசோஷியேசன் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அங்கு வந்து அரசிடம் இருந்து வந்த ஸ்தல ஆய்வு கடிதத்தை தருமாறு கேட்டனர். ஆனால் எவ்வித கடிதமும் இல்லாததால் அதிகாரிகள் திணறினர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அரசு அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
பின்னர் அரசு அதிகாரிகள் மீண்டும் எஸ்டேட்டுக்கு வந்து நிர்வாகத்திடம் ஒரு கடிதத்தை கொடுத்தனர். அதில், தமிழ்நாடு நில அளவை சட்டப்படி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டடிருந்தது.
இதற்கு அதிமுக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காலையில் ஒரு கடிதமும், மாலையில் வேறொரு கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நில அளவை செய்ய உபகரணங்கள் கொண்டு வரப்படவில்லை. மேலும் நில அளைவ செயவதற்கான கால அவகாசமும் அளிக்கவில்லை. புகார் கொடுத்தவரின் விவரமும் இல்லை. இதனால் அரசிடம் முறையான முறையான கடிதம் கொண்டு வரும் வரை அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
இந் நிலையில் அரசு அதிகாரிகள் அனைவரும் எஸ்டேட் நுழைவாயில் தாண்டி 500 மீட்டர் உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அதற்கு மேல் செல்ல விடாமல் அதிமுகவினர் அதிகாரிகளை தடுத்து நிறுத்திவிட்டனர்.
-
வடக்கே வன்னியர்..தெற்கே தேவர்! 3 பேருக்கு செக்.. அய்யா ராமதாஸை வைத்து சின்னம்மா சசிகலா போடும் கணக்கு -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
அதிமுக சார்பில் தேர்தலில் களமிறங்கும் காளியம்மாள்? 3 முறை போட்டியிட்டபோது என்ன ரிசல்ட்? -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
Jayalalitha: "அஇபுதமமுக"! ஆமா, ஜெயலலிதாவின் பெயரை சசிகலா தவிர்த்தது ஏன்? இந்த 5 காரணங்கள்தானா? -
அடிச்சு ஓட விட்ருவோம் பாரு! அதிமுகவுக்கு ஜம்ப் ஆன காளியம்மாள் யார்? மீனவ பெண்ணின் "வேங்கை மகன்" மூவ் -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Kaliyammal: காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி? அதிமுகவில் சேர்ந்ததும் எடப்பாடி போடும் கணக்கு.. பின்னணி -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது!













Click it and Unblock the Notifications