ராமர் பாலம்-இருந்துச்சு, ஆனா இப்ப இல்லை..
சென்னை:வானர சேனைகளுடன் பாலம் கட்டிய ராமர், பின்னர் அந்தப் பாலத்தை அம்பெய்தி அழித்து விட்டார் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
ராமர் பாலம் என்ற ஒன்றே இல்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் பாலம் இன்னும் இருக்கிறது. அதை உடைத்து விட்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து கட்சிகளும், அமைப்புகளும் கூறி வருகின்றன.
இந்த நிலையில் ராமர் பாலத்தை இடிக்கத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலனும், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் தனித் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் மத்திய அரசு 29ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இன்று சுவாமி மற்றும் ராம.கோபாலன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ன. முதலில் சுவாமி மனு விசாரணைக்கு வந்தது.
சுவாமியே தனது வழக்கில் நேரில் ஆஜராகி வாதாடினார். அவரது வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அந்த வழக்கு ஜூன் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ராம.கோபாலன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மனு மீது மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் உள்ளிட்ட 5 துறைகளின் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களில் பாலம் கட்டிய ராமர் பின்னர் அதை அழித்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பதில் மனுக்களின் சாராம்சம்
இலங்கையிலிருந்து இந்தியா திரும்பிய ராமர், பிறகு தனது வில்லிலிருந்து அம்பை எய்து தான் கட்டிய பாலத்தை அழித்து விட்டதாக தமிழக அரசின் கெஜட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்போது அந்தப் பாலம் இல்லை. இல்லாத பாலத்தை இருப்பதாக கூறும் இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
ராமர் பாலம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இது கற்பனையான பாலம்தான். ஆதம் பாலம் என்பது மணல் திட்டுக்களே ஆகும். அது மனிதர்களால் கட்டப்பட்ட பாலம் அல்ல.
பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிந்த பிறகே சேது சமுத்திரத் திட்டம் இறுதி செய்யப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் ராமர் பாலமே கிடையாது என்று கூறி வந்த மத்திய அரசு இப்போது, பாலம் இருந்தது, ஆனால் அதை ராமர் அழித்து விட்டார் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications