கும்பகோணம் கோவிலில் சிக்கிய பஞ்சலோக சிலைகள்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள பிரபலமான ஐராவதீஸ்வரர் கோவிலில் 6 பஞ்சலோக சிலைகள் பூமிக்கடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் 12ம் நூற்றாண்டில் 2ம் ராஜராஜ சோழன் கட்டிய ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் மதில் சுவர் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக பூமியைத் தோண்டியபோது 6 பஞ்சலோக சிலைகள் கிடைத்தன. 5 பார்வதி சிலைகளும், 1 திருஞானசம்பந்தர் சிலையும் இதில் அடங்கும்.
இந்த சிலைகள் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலிலுள்ள இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications