For Daily Alerts
Just In
கும்பகோணம் கோவிலில் சிக்கிய பஞ்சலோக சிலைகள்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள பிரபலமான ஐராவதீஸ்வரர் கோவிலில் 6 பஞ்சலோக சிலைகள் பூமிக்கடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் 12ம் நூற்றாண்டில் 2ம் ராஜராஜ சோழன் கட்டிய ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் மதில் சுவர் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக பூமியைத் தோண்டியபோது 6 பஞ்சலோக சிலைகள் கிடைத்தன. 5 பார்வதி சிலைகளும், 1 திருஞானசம்பந்தர் சிலையும் இதில் அடங்கும்.
இந்த சிலைகள் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலிலுள்ள இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Comments
tamil nadu kumbakonam கும்பகோணம் கோவில் thatstamil tamilnadu wall tamil news goddess local body election parvathi tn political
Story first published: Wednesday, May 30, 2007, 5:30 [IST]