மதுரை இடைத்தேர்தல்-அதிமுக, தேமுதிகவுக்குஆதரவளிக்க தயார்: பாஜக
சென்னை:மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க பாஜக தயாராக இருப்பதாக அக் கட்சியின் அகில இந்திய செயலாளர் திருநாவுக்கரசர் எம்பி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சொல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. விலைவாசி உயர்வு, பண வீக்க உயர்வு உள்ளிட்ட சில பின்னடைவுகள் மக்களிடையே காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சிக்கு ஒரு கரும்புள்ளியாகிவிட்டது.
விரைவில் நடைபெறவுள்ள கோவா, குஜராத் தேர்தல்களில் பாஜக மிகப் பெரிய வெற்றி பெறும். நதிகள் இணைப்பை முதல்வர் கருணாநிதி வற்புறுத்தி இருக்கிறார். இதை வரவேற்கிறாம். வாஜ்பாய் ஆட்சி நீடித்து இருந்தால் நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும். தற்போதைய நிலையில் தென்னிந்திய நதிகளையாவது இணைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும். ஏற்கனவே இதற்கான திட்டம் பாஜக ஆட்சியிலேயே தயாரிக்கப்பட்டு விட்டது.
வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் சுய வேலை வாய்ப்புக்கான ஒரு வாரியம் அமைக்க வேண்டும். படிக்கும் மாணவர்களுக்கு ஜாமீன் இல்லாம் வழங்கும் தொகையை படிப்புக்கு தகுந்தாற்போல அதிகரிக்க வேண்டும்.
மதுரை இடைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். இருந்தாலும் காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் ஆதரவை நேரடியாக கேட்டால் நாங்கள் ஆதரிக்க தயாராக இருக்கிறோம். எங்களை அவர்கள் ஆதரித்தாலும் ஏற்றுக் கொள்வோம். இல்லை என்றால் தனித்து போட்டியிவோம் என்றார்.












Click it and Unblock the Notifications