காஞ்சீபுரம் அருகே லாரிகள் மோதல்-3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சீபுரம்:காஞ்சீபுரம் அருகே லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் சென்னைக்கு காய்கறிகள் ஏற்றி வந்த லாரி காஞ்சீபுரம் அருகே வந்த போது முன்னாள் செங்கல் ஏற்றி சென்ற லாரி மீது மோதியது. இதில் லாரி டிரைவர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று பேர்களின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications