டி.ஆர் பாலு ஒரு பொய்யர்-பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை:ராமர் பாலம் இல்லை என்று கூறியுள்ள மத்திய கப்பல் துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் ஒரு பொய்யர் என பாஜக தலைவர் எல்.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது,

சேது சமுத்திர கால்வாயை ராமர் பாலம் வழியாக அமைக்க கடந்த பாஜக ஆட்சியில் தான் திட்டமிடப்பட்டது என அமைச்சர் டி.ஆர் பாலு கூறியுள்ளார். இது தவறான தகவலாகும். பாலு பொய் சொல்கிறார். அந்தப் பொய்யை திரும்பத் திரும்ப கூறி வருகிறார்.

தான் சொல்வதை பாலு நிரூபிக்க வேண்டும். அதை பாலு தகுந்து ஆதரத்துடன் நிரூபித்தல் நாங்கள் அதை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறோம்.

தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக அரசு கூறி வருகிறது. முஸ்லீம்களின் ஓட்டுகளை மனதில் வைத்து இதை திமுக வலியுறுத்தி வருகிறது. இதனால் இந்து தலித் சமுதாயத்தினருக்கு திமுக அநீதி விளைவிக்கிறது.

மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் பாஜகவுக்கு ஜனதா கட்சி ஆதரவு தந்துள்ளது.

பீடி பாக்கெட்டில் மட்டுமே அபாய முத்திரையிட வேண்டும் என மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால் சிகரெட் பாக்கெட்டில் அபாய முத்திரையை இட அரசு மறுக்கிறது. பீடி, சிகிரெட் இரண்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை தான். எனவே சிகிரெட் பாக்கெட்டிலும் அபாய முத்திரை இட வேண்டும்.

நதிகளை இணைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியதை பாஜக வரவேற்கிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+