கோவா சட்டசபை தேர்தல்-நாளை வாக்குப்பதிவு
பனாஜி கோவா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறுக்கிறது.
40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபை தேர்தலில் மொத்தம் 202 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
மொத்தம் 10,10,207 வாக்களார்கள் உள்ளனர். மொத்தம் 1066 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கள்ள ஓட்டு போடுவதை தடுக்க அனைத்து வாக்கு சாவடிகளிலும் வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தான் கடும் போட்டி நிலவுகிறது. இங்கு வசிக்கும் கன்னட மக்களை குறி வைத்து தேவே கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளமும் பல தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதன் மூலம் கெளடா காங்கிரசின் ஓட்டுக்களைப் பிரிப்பார் என கருதப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 5ம் தேதி நடைபெறுகிறது.
பாஜக 33 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதியிலும், மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி 26 தொகுதிகளிலும், சேவ் கோவா முன்னணி 17 தொகுதிகளிலும், மதச் சார்பற்ற ஜனதா தளம் 11 தொகுதிகளிலும், சிவாசேனா 7 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதியிலும், ஆர்பிஐ 4 தொகுதிகளிலும், மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட், ஜிஎஸ்பி 1 தொகுதியிலும், சுயோட்சை 50 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.
முதன் முறையாக மத்திய துணை ரணுவம் பாதுகாப்பு பணிக்க ஈடுபடுத்தப்படவுள்ளது. 266 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குசாவடி என கண்டுபிடிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications