ஜனாதிபதி தேர்தல்-ஷெகாவத் சுயேச்சையாக போட்டி
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் துணை குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பைரோன் சிங் ஷெகாவத்தை பாஜக சார்பில் பொது வேட்பாளராக நிறுத்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்து, அவருக்காக பல்வேறு கட்சிகளில் ஆதரவை திரட்டி வருகிறார். இதுகுறித்து நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடமும் வாஜ்பாய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால் காங்கிரஸ் ஷெகவாத்தை ஆதரவு அளிக்க முன்வரவில்லை. கம்யூனிஸ்டு கட்சிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
பாஜகவுக்கு மதவாத முத்திரை இருப்பதால் அதை காரணம் காட்டி பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே ஷெகாவத்தை சுயேச்சையாக போட்டியிட வைக்க வாஜ்பாய் முடிவு செய்துள்ளார். இதற்கு ஷெகாவத்தும் ஒத்துக் கொண்டார்.
ஷெகாவத் சுயேச்சை வேட்பாளராக நின்றால் பாஜக கூட்டணி கட்சிகள் தவிர பிற காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளும் அவருக்கு ஓட்டளிக்கும் என பாஜக கருதுகிறது.
மேலும் முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஷெகாவத்துக்கு நெருக்கிய நண்பர் என்பதால் அவர் மூலம் சில எம்பிக்களின் ஆதரவு திரட்டும் முயற்சிகளும் நடக்கின்றன.
அதே போல தேவே கெளடா, சந்திரபாபு நாயுடு, அஸ்ஸாம் கன பரிஷத் ஆகிய தலைவர்கள், கட்சிகளின் ஆதரவையும் பெற பாஜக முயன்று வருகிறது.












Click it and Unblock the Notifications