தேர்வில் தோல்வி-10ம் வகுப்பு மாணவன் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:பத்தாவது வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்த மாணவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
சென்னை பெரவள்ளூரை அடுத்துள்ள திரு.வி.நகரைச் சேர்ந்தவன் ஜாபர் உசேன். 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த உசேன், பரீட்சையில் தோல்வி அடைந்தான்.
இதனால் மனம் உடைந்த உசேன், தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications