விளாம்பட்டி துப்பாக்கி சூடு-போலீஸாரைசஸ்பெண்ட் செய்ய வைகோ கோரிக்கை
சென்னை:திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி கிராமத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியது கடும் ண்டனத்திற்குறியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் முத்தாலம்மன் கோயில் உண்டியல் திறப்பதில் தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதற்காக கலவரத்தை துண்டி விட்டவர்களை கைது செய்யக் கோரி அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆனால் காவல் துறையினர் ஊர் மக்களை காட்டுமிராண்டி தனமாக தாக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் குணசுந்தரி என்பவரது வலது கால் துண்டிக்கப்பட்டுள்ளது. சிவபிரகாசம் என்ற இளைஞர் உயிருக்கு ஆபந்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
போலீஸார் வீடு, வீடாக சென்று டிவி மற்றும் பொருட்களை உடைந்து நொறுக்கியுள்ளனர். மேலும் அப்பாவி மக்கள் பலரை கைது செய்துள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்திய சம்பந்தப்பட்ட போலீஸாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications