நைஜீரியாவில் 2 பெண்கள் உள்பட7 இந்திய தொழிலாளர்கள் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

லாகோஸ்:நைஜீரியாவில் வேலை பார்த்து வரும் மேலும் 7 இந்தியர்களைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.

நைஜீரியாவில் சமீப காலமாக இந்தியத் தொழிலாளர்களைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்று பணம் பறிக்கும் செயல் அதிகரித்து வருகிறது. இதுவரை சிலர் கடத்தப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தெற்கு நைஜீரியாவில், இந்தோரமா என்கிற இந்தோனேசியாவைச் சேர்ந்த எண்ணை நிறுவனத்தில் பணியாற்றி வரும் 3 அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியர்கள்.

இதற்கு முன்பு கடத்தப்பட்டு மீட்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்களும் இதே இந்தோரமா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை இரவு இந்த 7 இந்தியர்களும், தங்களது குடியிருப்பிலிருந்து துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டனர். அந்த சமயத்தில், காவலாளிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்டவர்களில் 2 பேர் பெண்கள், 2 சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 7 பேரையும் பத்திரமாக மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நைஜீரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+