கன்னியாகுமரி-குளத்தில் திருட்டுத்தனமாக மீன்பிடித்ததில் மோதல்-2 பேர் வெட்டிக் கொலை
கன்னியாகுமரி:கன்னியாகுமரியில் குளத்தில் திருட்டுத்தனமாக மீன் பிடித்தில் மோதல் ஏற்பட்டதில் 2 வாலிபர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி அருகே வெள்ளையந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணன் (36). இவர் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள நாடன் குளத்தை குத்தகைக்கு எடுத்து அதில் மீன் வளர்த்து வந்தார்.
இதில் சரவணன்தேரியை சேர்ந்த ஜெகன், நாடன்குளத்தை சேர்ந்த தங்கராஜ் ஆகியோர் திருட்டுத்தனமாக மீன் பிடித்து வந்தனர். இது தொடர்பாக கண்ணனுக்கும், ஜெகன், தங்கராஜ் ஆகியோருக்கு இடையே தகராறு இருந்து வந்தது.
இந் நிலையில் கடந்த மாசம் 6ம் தேதி கண்ணன் அவரது கூட்டாளிகள் செல்வம், பாஸ்கர் ஆகியோர் சேர்ந்து ஜெகனையும், தங்கராஜையும் வெட்டினர். இதில் படுகாயமடைந்த ஜெகன், தங்கராஜ் இருவரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இது தொடர்பாக கண்ணன் உள்பட 3 பேரும் மீது போலீஸார் வழங்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந் நிலையில் அவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்கள் மூவரும் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீன் பெற்றனர். அதன்படி 3 பேரும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தனர்.
இந் நிலையில் நேற்று வழக்கம் போல கையொழுத்து போட கண்ணனும், செல்வமும் ஒரு மோட்டார் சைக்கிளில் கோவளம் அருகில் உள்ள தலக்குளம் வழியாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஒரு டெம்போவில் வந்த ஒரு கும்பல் கண்ணனையும், செல்வத்தையும் தடுத்து நிறுத்தி சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து இருவரையும் அந்த குளத்தில் அந்த கும்பல் தூக்கி வீசி விட்டு சென்றது.












Click it and Unblock the Notifications