சாலை பணியாளர்கள் பணி நிரந்தரத்தில் மோசடி: இந்தியகம்யூனிஸ்ட்
சென்னை:தமிழகத்தில் சாலைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் மோசடி நடைபெற்றுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் கூறியதாவது
தமிழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட சாலைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்தார்.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் சாலைப் பணி நிரந்தரம் செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், பணி நிரந்தரம் செய்வதற்காக சாலைப் பணியாளர்களின் பெயர் பட்டியலை அதிகாரிகள் அளிக்கவில்லை.
மேலும், தங்களுக்கு வேண்டியவர்கள், தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் சிலரது பெயர்களை மட்டும் பட்டியலில் சேர்த்து அரசுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான சாலைப் பணியாளர்கள் அரசின் அறிவிப்பின் பயனை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் பணிபுரிபவர்க் பரிந்துரைகள் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
3-வது அணிக்கு கொள்கை இல்லை. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் ஒன்று சேர்ந்து 3-வது அணி அமைப்பது குறித்து பேசி வருகின்றனர்.
இது எந்த கொள்கையும் எந்த காரணமும் இல்லாமல் உருவாகும் அணி. இந்த அணி எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அணி மாற வாய்ப்பு தமிழகத்தில் திமுகவை விட சிறப்பான பொருளாதார, சமூக மாற்றத்துக்கான திட்டத்தை யாராவது முன்வைத்தால் அந்த அணிக்கு செல்வது குறித்து பரிசீலிக்கலாம்.












Click it and Unblock the Notifications