விபச்சாரம்- சிக்கினார் ஊர்வம்பு டிவி நடிகை
சென்னை:டிவி நடிகை உதயஸ்ரீ உள்பட 3 பேரை வைத்து விபச்சாரம் செய்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை திநகர் பேருந்து நிலையத்தில் நின்றபடி விபச்சாரத்திற்கு ஆட்களை கூப்பிட்டு வந்தது ஒரு கும்பல். இதையடுத்து உதவி கமிஷ்னர் சங்கரபாண்டியன் தலைமையில் போலீஸார் மாறுவேடத்தில் பேருந்து நிலையத்திற்கு சென்றனர்.
![]() |
அங்கு இவர்களை அணுகிய விருதுநகரை சேர்ந்த புரோக்கர் பாலகிருஷ்ணன் என்பவர் தன்னிடம் பெண்கள், நடிகைகள், சிறுமிகள் இருப்பதாகக் கூறினார்.
மாறுவேட போலீசார் மண்டையை ஆட்டியதோடு அட்வான்ஸ் பணமும் தந்தனர். இதையடுத்து அவர்களை புழுதிவாக்கத்திலுள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார் பாலகிருஷ்ணன்.
இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனையில் இறங்கி சங்கரராஜன்(46), ஹைதராபாத்தை சேர்ந்த பிரசாத்(30), தாம்பரத்தை சேர்ந்த ஜெயலட்சுமி(37) ஆகிய புரோக்கர்களை கைது செய்தனர்.
மேலும் இந்தக் கும்பலின் பிடியில் சிக்கியிருந்த ஹைதராபாத்தை சேர்ந்த தீபிகா(15), மாதுரி(22) ஆகியோரை அங்கிருந்து மீட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வீட்டு வேலை வாங்கி தருவதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளிவிட்டதாகவும், முன்பு ராமாபுரத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும் கூறினர்.
இதனையடுத்து ராமாபுரம் வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டபோது, அங்கு டிவி நடிகை உதயஸ்ரீ இருந்தார். இவர் ராஜ் டிவியில் ஊர் வம்பு, சன் டிவியில் அரசி உள்ளிட்ட டிவி தொடர்களில் நடித்தவர்.
அவரிடம் விசாரித்தபோது, கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்தாலும் டிவி தொடரில் நடித்து சம்பாதிக்கும் வருமானம் போதவில்லை என்பதாலும் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறினார்.
இதையடுத்து உதயஸ்ரீ, தீபிகா, மாதுரி ஆகியோர் மகளிர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். போலீஸாரால் கைது செய்யப்பட்ட 4 புரோக்கர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.













Click it and Unblock the Notifications