3வது அணியின் ஏமாற்று வேலை-காங்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: 3 வது அணியினர் குடியரசு தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை நிறுத்தப்போவதாகவும், அவரிடம் சம்மதம் கேட்கபோவதாகவும் கூறுவது மக்களை ஏமாற்றுவதாக உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

இந்திய வரலாற்றில் குடியரசு தலைவர் தேர்தலுக்கு அனுபவம் வாய்ந்த பெண் வேட்பாளரை சோனியா காந்தி அறிவித்தி்ருக்கிறார்.

பெண் வேட்பாளரை ஆதரிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறுக்கிறார். சோனியா காந்தி பிரதமராவதை எதிர்த்தவர் ஜெயலலிதா.

பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவதாக கூரி மக்களை ஏமாற்றி வருகிறார். அவரை தவிர மற்ற பெண்கள் உயர் பதவிக்கோ அல்லது அதிகாரத்திற்கோ வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்.

அப்துல் கலாம் இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் சுயேட்சையை ஆதரிப்பதாக கூறுவார்கள். எனவே இவர்கள் மதச்சார்பற்ற கொள்கையை ஏற்பவர்கள் இல்லை என்பது நிரூபணமாகிறது.

இங்கு யாருக்கும் பணம் காங்கிரஸ் சார்பில் தரப்படவில்லை. எங்கள் சாதனைகளை கூறி ஆதரவு திரட்டி வருகிறோம். எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. தவறான பிரச்சாரம் செய்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தான் நடித்த ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால், அதில் நடித்தவர் முதல்வர் ஆகவேண்டும் என ஆசைப்படுகிறார்.

எங்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு விஜயகாந்திற்கு எந்தவிதமான தகுதியும் கிடையாது என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+