ரஜினி-சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு
சென்னை:ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டுக்கு வந்த முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திடீரென ரஜினிகாந்த் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார்.
![]() |
சென்னையில் ஜெயலலிதா வீட்டில், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின்னர் அதே போயஸ் கார்டன் பகுதியில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு சந்திரபாபு நாயுடு திடீரென விசிட் அடித்தார். ரஜினியுடன் சுமார் ஒரு மணி நேரம் தனிமையில் பேசினர்.
![]() |
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த நாயுடுவை செய்தியாளர்களும், புகைப்படக்காரர்களும் மொய்த்துக் கொண்டனர். ரஜினியை சந்தித்தது ஏன், என்ன பேசினீர்கள் என்று கேட்டதற்கு, நாயுடு சிரித்தபடி, இதில் விசேஷம் ஒன்றும் இல்லை. மரியாதை நிமித்தமாகத்தான் ரஜினியை சந்தித்து்ப பேசினேன் என்று கூறி விட்டுக கிளம்பத் தயாரானார்.
ஆனாலும் விடாத செய்தியாளர்கள், உங்கள் அணிக்கு ரஜினியின் ஆதரவு உண்டா என்று கேட்டனர். அதற்கு நாயுடு, ஆதரவு அளித்தால், மறுக்கவா போகிறோம். ஆனாலும் அது பற்றியெல்லாம் ரஜினி எதுவும் பேசவில்லை என்றார் சிரித்தபடி.
சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நாயுடுவுக்கு சிவாஜி படத்தை திரையிட்டுக் காட்டினார் ரஜினி. அப்போது ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications