அப்துல் கலாமுடன் மோதவில்லை-காங்.
டெல்லிகுடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக அப்துல் கலாமுடன் காங்கிரஸ் கட்சி எந்த மோதலிலும் ஈடுபடவில்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கியுள்ளது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை கடுமையாக விமர்சித்து நேற்று மத்திய அமைச்சர்கள் சரத் பவார், லாலு பிரசாத் யாதவ், பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதில் முன்ஷி, கலாம் மீண்டும் போட்டியிடக் கூடாது என்று கூறியிருந்தார். பவாரோ, கலாம் ஆட்டம் முடிந்து விட்டது என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் எந்தவித மோதலிலும் ஈடுபடவில்லை என்று விளக்கியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இப்போதைக்கு குடியரசுத் தலைவர் கலாமுடன் காங்கிரஸ் எந்தவிதமான மோதலிலும் ஈடுபடவில்லை.
ஏற்கனவே பிரதீபா பாட்டீலை வேட்பாளராக அறிவித்து விட்டதால், தங்களை வேட்பாளராக அறிவிக்க இயலாத நிலையில் உள்ளதாக டாக்டர் கலாமிடம் காங்கிரஸ் கட்சி அறிவித்து விட்டது.
ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் அரசியலைப் புகுத்தி அசிங்கப்படுத்தி விட்டது 3வது அணி. இதன் மூலம் தேவையற்ற சர்ச்சையயும் அந்த அணி உருவாக்கி விட்டது. குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் மூன்றாவது அணி இவ்வாறு செயல்படுகிறது என்றார் ஜெயந்தி நடராஜன்.












Click it and Unblock the Notifications