அயர்லாந்தை அடித்து நொறுக்கிய இந்தியா
பெல்பாஸ்ட்:
அயர்லாந்து அணியுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில், இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளுடனான ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
![]() |
நேற்று பெல்பாஸ்ட் நகரில் இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கிடையே முதலாவது போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ராகுல் டிராவிட், அயர்லாந்தை முதலில் பேட் செய்யும்படி பணித்தார்.
இந்திய அணியில், ஜாகிர்கான், டோணி ஆகியோர் விளையாடவில்லை. அவர்களுக்குப் பதில் திணேஷ் கார்த்திக், ரோஹித் வர்மா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி, ரன் குவிக்க முடியாமல் திணறியது. 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இளம் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா, வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் இருவரும் ரன் எடுக்க விடாமல் எதிரணியை கட்டுப் படுத்தினர்.
அயர்லாந்து அணியின் ஓபிரையன் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார்.அவருக்கு இணையாக ஜான்சன் அதிரடியாக 44 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சாளர்களில் ஸ்ரீசாந்த், சாவ்லா தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்திய அணி பேட்டிங்கை துவக்கும் வேளையில் மழை பெய்ததால் போட்டி தாமதமாக துவங்கியது. அதனால் இந்திய அணி 39 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கங்குலியும், டெண்டுல்கரம் இறங்கினர். அடித்து நொறுக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட டெண்டுல்கர் 4 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார்.
ஆனால் கங்குலியும், கெளதம் காம்பீரும் இணைந்து அடித்து நொறுக்கத் தொடங்கினர். இருவரும் ஆட்டம் இழக்காமல் 162 ரன்கள் சேர்த்தனர். காம்பீர் 109 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 80 ரன்கள் எடுத்தார். கங்குலி 100 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 35 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து டக்வொர்த்-லூயிஸ் விதிப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்ட நாயகனாக கவுதம் காம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.













Click it and Unblock the Notifications