பரவி வரும் எலிக் காய்ச்சல்-2 பேர் பலி:ராமநாதபுரத்தில் பீதி
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் போன்ற வித்தியாசமான காய்ச்சலுக்கு இதுவரை 2 பேர் பலியாகியுள்ளதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
சிக்குன்குனியா, டெங்கு என உயிரைப் பறிக்கும் காய்ச்சல்களால் தமிழக மக்கள் சில மாதங்களுக்கு முன்பு பெரும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வித்தியாசமான புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கிடத்திருக்கை (காரைக்குடி அருகே உள்ளது) மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இந்த புதிய வகை காய்ச்சல் படு வேகமாக பரவி வருகிறது.
இந்தக் காய்ச்சலுக்கு கிடத்திருக்கையைச் சேர்ந்த ராமபாண்டி, அதே கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல் ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.
இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாசடைந்த குடிநீரைக் குடித்ததால்தான் இந்த வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது என்ன வகை காய்ச்சல் என்று அதிகாரிகள் விளக்க மறுத்து விட்டனர். அநேகமாக இது எலிக் காய்ச்சலாக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆட்சித் தலைவர் கிர்லோஷ் குமார் கூறுகையில் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. முதுகுளத்தூரில் தங்கியிருந்து இந்தக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள் என்றார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications