பெங்களூர் சென்றார் கருணாநிதி
சென்னை:முதல்வர் கருணாநிதி தனது மனைவி தயாளு அம்மாளுடன் பெங்களூர் சென்றுள்ளார். 3 நாட்களுக்கு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார் முதல்வர் கருணாநிதி. அவருடன் மனைவி தயாளு அம்மாள், குடும்ப டாக்டர் கோபால் உள்ளிட்டோர் சென்றனர்.
![]() |
பெங்களூரில் உள்ள மகள் செல்வி வீட்டில் கருணாநிதியும், தயாளு அம்மாளும் 3 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளனர். 10ம் தேதி மாலை பெங்களூரிலிருந்து கருணாநிதி சென்னை திரும்புவார்.
இதேபோல அமைச்சர் துரைமுருகனும் பெங்களூர் சென்றுள்ளார். இவரது மகள் வீடும் பெங்களூரில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
13 மாதங்களில் ரூ. 9710 கோடி முதலீடுகள்:
முன்னதாக சென்னை அருகே உள்ள மறைமலை நகரில், டஃபே நிறுவனத்தின் 3வது தொழிற்சாலையை முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்து 13 மாதங்களில் ரூ. 9710 கோடி மதிப்பிலான முதலீடுகளை கொண்டு வந்துள்ளது.
கடந்த 2001-06ம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த கால கட்டத்தில் மொத்தமே ரூ. 2220 கோடி அளவிலான முதலீடுகள்தான் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 13 மாதங்களிலேயே திமுக அரசு இவ்வளவு பெரிய முதலீட்டைக் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக அரசின் செயல்பாடுகள், தொழில் வளர்ச்சியில் காட்டும் அக்கறை, அணுசரணை ஆகியவற்றையே இது காட்டுகிறது.
நகரங்களிலும், புற நகரங்களிலும் மட்டும் தொழில் வளர்ச்சி இருந்தால் போதாது, கிராமங்களுக்கும் அது பரவ வேண்டும் என மக்கள் தற்போது நினைக்கிறார்கள். அந்த லட்சியத்தின் அடிப்படையில்தான் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.













Click it and Unblock the Notifications