பழம் தந்த சிறுவனை மிதித்து கொன்ற யானை!
பெங்களூரு:வாழைப்பழம் கொடுக்க வந்த சிறுவனை கோவில் யானை மிதித்து கொன்றது.
பெங்களூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மஞ்சு. இவர் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் எடியூரில் உள்ள சித்தலிங்கேஸ்வரா கோவிலுக்கு சென்றார்.
சாமி கும்பிட்ட பின் கோவில் வளாகத்தில் குடும்பத்தோடு அமர்ந்திருந்தனர். அப்போது மகன்கள் இருவரும் கோவிலில் இருந்த யானைக்கு பழம் தர விரும்பினர்.
![]() |
இதையடுத்து அவர்களிடம் மஞ்சு வாழைப் பழத்தை கொடுத்தனுப்பினார்.
மஞ்சுவின் குழந்தைகள் சச்சின், சஞ்சய் இருவரும் யானைக்கு பழம் கொடுத்தனர். இதில் சச்சின் பழத்தை கொடுத்த போது யானை அவனை எட்டி உதைத்தது.
உடனிருந்த சஞ்சய் பயந்து ஓடி வந்து இதை தந்தையிடம் தெரிவித்தான். உடனே மஞ்சு பதறியடித்து அங்கு சென்று பார்த்த போது யானை அதற்குள் சச்சினை மிதித்து கொன்றுவிட்டது.
அப்போது யானை பாகன் அங்கில்லை. இதனால் அங்கிருந்த பக்தர்கள் கோபமடைந்து கோவில் வளாகத்தை சூறையாடினர்.
கோயில் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வராததை கண்டித்து, குழந்தையை பறிகொடுத்த பெற்றோர், பக்தர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
குழந்தையின் சவத்தை எடுக்காமல் கோவில் முன்பு வைத்து போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தும்கூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications