4 தொகுதிகளில் போட்டி: ஜெ. மீதுசிதம்பரம் கோர்ட்டில் வழக்குப் பதிவு!!
சிதம்பரம்:நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி இன்று சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது, ஜெயலலிதா ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதை எதிர்த்து திமுக எம்.பி. செ.குப்புசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தேர்தல் அதிகாரிகள் வழக்கு தொடரும் பணியை தொடங்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று புவனகிரி தேர்தல் அதிகாரி செல்வமணி சார்பில், சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிபதி வசந்தியிடம் இதுதொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி வசந்தி, இந்த வழக்கை இங்கு தொடர முடியாது. கடலூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திலோ அல்லது பரங்கிப்பேட்டை நீதிமன்றத்திலோதன் தொடர முடியும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இன்று அல்லது நாளைக்குள் இந்த இரு நீதிமன்றங்களில் ஒன்றில் ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications