மருத்துவ ரேங்க் பட்டியலிலிருந்து400 பி.இ. மாணவர்கள் நீக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலிலிருந்து 400 மாணவ, மாணவியர் நீக்கப்பட்டுள்ளனர்.

பி.இ உள்ளிட்ட பிற தொழில் படிப்புகளில் சேர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்கள் அதை பாதியில் நிறுத்தி விட்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேர அனுமதி கிடையாது என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது.

இதையடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மாற்றம் செய்துள்ளது. அதன்படி தொழிற் படிப்புகளை படித்துக் கொண்டிருந்த, பாதியில் விட்டு விட்டு வந்த 400 மாணவ, மாணவியர்கள் தகுதியிழந்தவர்களாக அறிவிக்கப்பட்டு ரேங்க் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுப் பிரிவு செயலாளர் டாக்டர் கலைச்செல்வி கூறுகையில், நேற்றை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 400 மாணவ, மாணவியர் தகுதியிழந்தவர்களாகியுள்ளனர்.

அவர்களுக்குப் பதில், அவர்களுக்குக் கீழ் இருந்த 400 பேர் மதிப்பெண், இட ஒதுக்கீட்டு அடிப்படையில் ரேங்க் பட்டியலில் மேலே கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+