3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்
மணப்பாறை:திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது மூன்று குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்ற பெண், தானும் தற்கொலை செய்ய முயன்றபோது காப்பாற்றப்பட்டார்.
மணப்பாறை அருகே உள்ள ஒத்தக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் ஒரு கொத்தனார். இவருக்கு வளர்மதி (21) என்ற மனைவியும், விண்மதி (7), காயத்ரி (5), சுரேஷ் (1) ஆகிய மூன்று குழந்தைகளும் இருந்தனர்.
சில நாட்களாக சந்திரனுக்கும், வளர்மதியும் சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் வேதனை அடைந்த வளர்மதி, தனது குழந்தைகளுடன் அருகில் இருந்த கிணற்றுக்குச் சென்றார்.
மூன்று குழந்தைகளையும் கிணற்றில் வீசினார்.
பின்னர் அவரும் கிணற்றில் குதித்தார். கிணற்றில் விழுந்த சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நான்கு பேரையும் கிணற்றில் இறங்கி மீட்டனர். ஆனால் குழந்தைகள் மூன்று பேரும் இறந்து விட்டனர். வளர்மதி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications