வாக்களிக்க வந்து திரும்பி போன விஜய்காந்த்!
சென்னை:ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூட்டம் அதிகமாக இருந்ததால் வாக்களிக்காமலேயே திரும்பிப் போனார்.
வித்தகன் படப்பிடிப்பு தளத்திலிருந்து நேராக மேக்கப் சகிதம் தலைமைச் செயலகத்தில் உள்ள வாக்களிக்கும் மையத்துக்கு வந்த விஜய்காந்த், நீண்ட வரிசையில் எம்எல்ஏக்கள் நிற்பதைப் பார்த்துவிட்டு அப்படியே திரும்பிப் போனார்.
இதையடுத்து அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர் கூறுகையில், சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பாதியில் வந்தேன். இங்கே கூட்டம் மிக அதிகமாக உள்ளது. இதனால் சூட்டிங்கிற்கு திரும்புகிறேன். திரும்பி வந்து நிச்சயம் ஓட்டு போடுவேன் என்றார்.
யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டபோது, மனசாட்சிப்படி வாக்களிப்பேன் என்று கூறிவிட்டுச் சென்றார்
விஜய்காந்த் தனது ஆதரவை யாருக்கும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் அவரை பாஜக கூட்டணி சார்பில் பெர்னாண்டசும் லோக்கல் பாஜகவினரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதனால் அவரது வாக்கு ஷெகாவத்துக்கே போகலாம்.












Click it and Unblock the Notifications