ஜெ.வின் சுயநலத்தால் 3வது அணி காலி: மொய்லி
Subscribe to Oneindia Tamil
சென்னை:ஜெயலலிதாவின் சுய நலப் போக்கால் 3வது அணி உடைந்து போய் விட்டது. இனிமேல் 3வது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயலலிதாவின் நிறம் தற்போது வெளுத்து விட்டது. தனது சுயநலத்துக்காகவே, சுய லாபங்களுக்காகவே 3வது அணியை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஜெயலலிதாவின் போக்கால், 3வது அணி முழுமையமாக உடைந்து விட்டது. இனிமேல் 3வது அணிக்கு எதிர்காலம் கிடையாது என்றார் மொய்லி.












Click it and Unblock the Notifications