தான்சானியா நாட்டு கப்பல் மாயம்: இந்திய மாலுமிகளின் கதி?
Subscribe to Oneindia Tamil
ஜான்பியார்:தான்சானியா நாட்டின் சரக்குக் கப்பல் நடுக்கடலில் திடீரென மாயமாகிவிட்டது. ஆனால், சுமார் 1 மாதத்துக்குப் பின் இப்போது தான் இந்த விவரம் வெளியில் வந்துள்ளது.
எம்.வி.ரீப் அகானியா என்ற அந்த சரக்குக் கப்பல் இந்தியப் பெருங்கடல் அருகே வந்த அந்தக் கப்பல் ஒரு மாதத்துக்கு முன் மாயமாகிவிட்டது. அந்த கப்பலில் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 2 மாலுமிகள், தான்சானியா நாட்டைச் சேர்ந்த மாலுமிகள் 8 பேர், மியான்மர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 4 பேர் இருந்தனர்.
கப்பல் மாயமாகி 1 மாதம் ஆகிவிட்டது என்றாலும் அந்தத் தகவலே இப்போது தான் வெளிவந்துள்ளது. அதில் இருந்த 14 மாலுமிகளின் கதி என்னவாயிற்று என தெரியவில்லை.
கடந்த ஒரே மாதத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் கப்பல் காணாமல் போனது இது 3வது முறையாகும்.












Click it and Unblock the Notifications