திருப்பூர் நகராட்சியில் கோடிக்கணக்கில் ஊழல்:பொறியாளர்கள் உட்பட 6 பேர் சஸ்பெண்டு
திருப்பூர்:திருப்பூர் நகராட்சியில் ஊழல் செய்த பொறியாளர்கள் உள்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருப்பூர் நகர வார்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்ததாகக் கூறி, அதற்கான கணக்குகளை ஊழியர்கள் எழுதி வைத்தனர். சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை அதிகாரிகள், அந்தக் கணக்குளை சரி பார்த்தபோது எந்தப் பணியையும் மேற்கொள்ளாமல் கோடிக்கணக்கான பணத்தை ஊழியர்கள் சுருட்டியது தெரியவந்தது.
இதையடுத்து நகராட்சியின் முதன்மை பொறியாளரான ரவிராஜ், இன்ஜீனியர் லட்சுமணன், ஊழியர்கள் ராமசாமி, கணக்காளர்சுப்பிரமணியன், டீ மேன் ரவி மற்றும் கிளார்க் ராஜேந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இவர்களைத் தவிர இந்த மோசடியில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகையில்,
மோசடியில் ஈடுபட்டவர்களை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது. அவர்களின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மோசடி ஊழியர்கள் அனைவரையும் பணியிலிருந்து நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
மேலும் இதற்கு துணை போன அதிகாரிகள், காண்ட்ராக்டர்கள் ஆகியோர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications