ஆப்கானில் 18 தென் கொரிய கிறிஸ்துவர்கள்கடத்தல்-கொல்லப் போவதாக தலிபான் மிரட்டல்
காபூல்:ஆப்கானிஸ்தானில் 15 பெண்கள் உள்பட 18 தென் கொரிய கிறிஸ்துவர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை கொலை செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படையுடன் தென் கொரிய ராணுவமும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
தென் கொரியாவைச் ேசர்ந்த 200 வீரர்கள் ஆப்கனில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் தலிபான் தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு தென் கொரிய ராணுவ வீரர்கள்தான் காரணம் என நினைத்த தலிபான்கள், சில தினங்களுக்கு முன்பு கந்தஹார் அருகே பஸ்ஸில் வந்த தென் கொரியாவைச் சேர்ந்த 18 கிறிஸ்துவர்களை கடத்தி சென்றனர்.
இதுகுறித்து தலிபான் அமைப்பைச் சேர்ந்த யூசூப் அஹ்மதி என்பவர் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,
பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள இவர்கள் உயிருடன் திரும்ப வேண்டுமானால், ஆப்கானிஸ்தானில் இருக்கும் தென் கொரியப் படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் 18 பேரையும் கொன்றுவிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.
கடத்தி செல்லப்பட்ட 18 பேரில் 15 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ் உத்தரவு:
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் கைது செய்யப்படும் தீவிரவாதிகளை விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க படையினரிடம் சிக்கும் தீவிரவாதிகளை செக்ஸ்ரீதியாக கொடுமைப்படுத்துவதாகவும், விசாரணை என்ற பெயரில் ஆடைகளை கழற்றி நிர்வாண நிலையில் அவர்களின் மீதுஅதிக அழுத்தத்துடன் தண்ணீர் பாய்ச்சி கொடுமைப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
மேலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் முஸ்லீம் பெண்களை அமெரிக்க படையினர் கற்பழிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து கைது செய்யப்படும் எவரையும் விசாரணை என்ற பெயரில் எந்தவொரு சித்ரவதைக்கும் ஆளாக்கக் கூடாது என புஷ் அமெரிக்க ராணுவ உயரதிகாரிகளுக்கும், புலனாய்வுப் பிரிவினருக்கும் ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications