சேலம்: ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி!
Subscribe to Oneindia Tamil
சேலம்:சேலம் மாவட்டம் அரியனூரில் ஏரியில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
அரியனூரில் உள்ள மலங்காட்டு ஏரியில் செளந்திரராஜன்(9), நவீன்(7), அஜித்குமார்(8) மற்றும் கார்த்தி(9)ஆகியோர் குளித்துக் கொண்டிருந்தனர். ஆழமான பகுதியில் நீந்திய இவர்கள் ஏரியில் மூழ்கினர்.
தகவல் அறிந்த போலீஸார் தீயணைப்புப் படையினரோடு வந்து சிறுவர்களை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் நால்வரும் பலியாகிவிட்டனர். அவர்களது உடல்களைத் தான் மீட்க முடிந்தத.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஏரியில் நீர்வரத்து அதிகளவு இருந்தது. அதனால் ஏரியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை மீறி சிறுவர்கள் குளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications