சவூதி தீவிபத்தில் இந்தியர் உள்பட நால்வர் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:சவூதி அரேபியாவின் ராஸ் தனுரா எண்ணைக் கிணற்றில் நடந்த பெரும் தீவிபத்தில் சிக்கி இந்தியர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
சவூதி அரேபியாவின் ராஸ் தனுரா என்ற இடத்தில், சவூதி அரேபிய அரசுக்குச் சொந்தமான சவூதி ஆரம்கோ என்ற நிறுவனத்தின் எண்ணை கிணறு உள்ளது.
இங்கு இன்று பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி நான்கு பேர் பலியானார்கள். அவர்களில் ஒருவர் இந்தியர். மற்ற மூவரில் இருவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர்.
தீவிபத்தில் 12 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஆறு பேர் இந்தியர்கள், நான்கு பேர் இலங்கையர்கள். ஒருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் எண்ணை நிறுவன அதிகாரி ஆவார்.
எண்ணைக் கிணற்றில் பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications